தேவாலயம் ஒன்றுக்குள் புகுந்து 50 மில்லியன் பெறுமதியான நகை கொள்ளை..! 4 கொள்ளையா்களை அதிரடியாக மடக்கியது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
தேவாலயம் ஒன்றுக்குள் புகுந்து 50 மில்லியன் பெறுமதியான நகை கொள்ளை..! 4 கொள்ளையா்களை அதிரடியாக மடக்கியது பொலிஸ்..

தேவாலயம் ஒன்றுக்குள் புகுந்து சுமாா் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டது டன் தேவாலயத்தில் இருந்தவா்களை கட்டிவைத்து துன்புறுத்திய 4 கொள்ளையா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 

தலாத்துஓயா, கல்தென்ன பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் நேற்று முனதினம் அதிகாலை 3.45 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த 06 பேர், தேவாலயத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தி, 

கை, கால்களை கட்டி 400,000 ரூபா பணம் மற்றும் 10 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய தங்கநகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, வீதியின் இரு மருங்கிலும் இருந்த கண்காணிப்பு கெமராக்களின் உதவியுடன் மற்றும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் முச்சக்கரவண்டியை பொலிஸார் கண்டுபித்தனர்.

இதன் அடிப்படையிலான தகவலைக் கொண்டு திருடப்பட்ட தங்கநகைகளுடன் 04 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு