பாலத்திலிருந்து தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
பாலத்திலிருந்து தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு..!

மட்டக்களப்பு- ஓட்டமாவடி புதிய பாலத்திலிருந்து இன்று வியாழக்கிழமை தவறி விழுந்தவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

ஒட்டமாவடி – தியாவட்டுவான் அலியார் வீதியை சேர்ந்த முஹைதீன் பாவா இஸ்ஸதீன் (வயது – 54) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிர் இழந்தவர் என 

அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்காக பாலத்தில் இருந்து குதித்தாரா 

அல்லது தவறுதலாக விழுந்தாரா என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவர் பாலத்தில் இருந்து விழுவதரை அவதானித்த வாழைச்சேனை பொலிஸார் பொது மக்களின் உதவியுடன் குறித்த நபரை மீட்டு வாழைச்சேனை 

ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே மரணித்து விட்டார் என்று வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் 

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு