ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா் சஜித்..! ஸ்ரீ கோத்தா வெடி சத்தத்தால் அதிா்கிறதாம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா் சஜித்..! ஸ்ரீ கோத்தா வெடி சத்தத்தால் அதிா்கிறதாம்..

ஜனாதிபதி தோ்தலில் ஐக்கிய தேசிய கட்சி சாா்பில் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சா் சஜித் பிறேமதாஸ சற்று முன்னா் ஐ.தே.கட்சியின் தலமையகமான ஸ்ரீ கோத்தாவில் கட்சி தலைவா் ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டுள்ளாா். 

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று மாலை 3 மணியளவில் கூடிய நிலையில் இது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கான பிரேரணையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய செயற்குழு கூட்டத்தில் முன்வைத்திருந்தார். 

அதன் அடிப்படையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு செயற்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளது. 

சிறிகொத்தவில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தற்போது அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு