தியாகி திலீபனின் நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில்..!

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில்..!

தியாகி திலிபனின் ஆரம்ப நிகழ்வு 15.09.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை தியாகி திலீபன் உண்ணாவிரத்ததை ஆரம்பித்த நேரமான காலை 9.30 மணியளவில்  யாழ்பல்கலையில் நினைவுநாள் ஆரம்பமாகியது. 

இறுதி நாள் நிகழ்வு தாயகம் எங்கும் நடைபெற்று வருகின்ற சூழலில் யாழ்பல்கலையில் "உயிர்கொடை அளித்தவர் நினைவாய் அளித்திடுவோம் குருதிக்கொடை" என்ற வாசகத்துடன்  இரத்தான முகாம் அமைத்து அதிகளவான மாணவர்கள் 

குருதிக்கொடைகளை அளித்து வருகிறார்கள். குருதிக்கொடை அளித்த. பின்பு திலிபன் வீரச்சாவை தழுவிய நேரத்தில் நினைவு நிகழ்வு இடம்பெறஉள்ளது. அதனைத் தொடர்ந்து திலிபன் நினைவுகள் விருட்சமாக வேண்டும் 

எனும் எண்ணத்தில் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு