வெள்ளத்தில் மூழ்கபோகும் இலங்கை நாடாளுமன்றம்..!

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தில் மூழ்கபோகும் இலங்கை நாடாளுமன்றம்..!

இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடா்ச்சியான கனமழை பெய்துவரும் நிலையில் இலங் கை நாடாளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சாிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு வெள்ள அனர்த்தங்களும் ஏற்பட்டன.

இந்நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தைச் சுற்ற உள்ள தியவன்னா குளம் தற்போது வெள்ளநீரில் நிரம்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் வெள்ளநீர் நாடாளுமன்றத்திற்குள் வராதபடிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு