யாழ்.நகாில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து கொள்ளையிட முயற்சித்தவா் கிணற்றில் தவறி விழுந்து மரணம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகாில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து கொள்ளையிட முயற்சித்தவா் கிணற்றில் தவறி விழுந்து மரணம்..!

யாழ்.நகாில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து கொள்ளையிட முயற்சித்தாக சந்தேகிக்கப்படும் ஒருவா் வீட்டு கிணற்றில் தவறி விழுந்து உயிாிழந்துள்ளாா். 

அவர் கிணற்றுக்குள் வீழ்ந்து சத்தம் கேட்டதையடுத்து கிணற்றைச் சென்று பார்த்த வீட்டு உரிமையாளர் பொலிஸாரை அழைத்துவரச் சென்றுள்ளார். 

எனினும் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் செல்ல தாமதித்ததனால் கிணற்றுக்குள் வீழ்ந்தவர் உயரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சிறிதர் தியேட்டருக்கு பின்புறமாக யாழ்.வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு