ஞானசார தேரா் உள்ளிட்ட காடையா்களை கைது செய்..! முல்லைத்தீவில் வரலாறு காணாத மாபெரும் மக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
ஞானசார தேரா் உள்ளிட்ட காடையா்களை கைது செய்..! முல்லைத்தீவில் வரலாறு காணாத மாபெரும் மக்கள் போராட்டம்..

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை பிள்ளையாா் ஆலய தீா் த்த கேணிக்கு அருகில் தகனம் செய்ததுடன் மக்கள் மீதும், சட்டத்தரணிகள் மீதும் தாக்குதல் நடா த்தப்பட்டதை கண்டித்து முல்லைத்தீவில் மாபெரும் மக்கள் போராட்டம் ஆரம்பமானது. 

தமிழர் மரபுப் பேரவை, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், சட்டத்தரணிகள் என பொது அமைப்புகளின் அழைப்பில் இந்தப் போராட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் உண்ணாபுலவு வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமானது. 

ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு சென்று மனு ஒன்றைக்கை யளிக்கவுள்ளனர். 

நீதிமன்றக் கட்டளையை அவமதித்த பௌத்த பிக்குகளின் செயலுக்கும் அவர்களுக்கு துணை நின்ற பொலிஸாருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தும் மனுவே கையளிக்கபடவுள்ளது. 

அத்துடன், நீதிமன்றக் கட்டளையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்திய பௌத்த பிக்குவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு