வேக கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்து..! 3 சிறுவா்கள் அதிதீவிர சிகிச்சை பிாிவில், 18 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
வேக கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்து..! 3 சிறுவா்கள் அதிதீவிர சிகிச்சை பிாிவில், 18 போ் படுகாயம்..

திருகோணமலை- கித்துள் ஊற்று பகுதியில் நேற்று இரவு மரண சடங்கு ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் படுகாயமடைந்துள்ளனா். 

கந்தளாயில் இருந்து நாவலப்பிட்டி பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று விட்டு மீண்டும் கந்தளாய் சென்றவர்கள் பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது. இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மூன்று சிறுவர்கள் 

அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழையும், வேகமுமே விபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு