பிக்குகள் அவமதிக்கப்பட்டனராம்..! ஆனால் சம்பவ இடத்தில் நடந்தது எதுவும் தனக்கு தொியாதம்.. கம்பு சுத்துகிறாா் கோட்டா.

ஆசிரியர் - Editor I
பிக்குகள் அவமதிக்கப்பட்டனராம்..! ஆனால் சம்பவ இடத்தில் நடந்தது எதுவும் தனக்கு தொியாதம்.. கம்பு சுத்துகிறாா் கோட்டா.

இலங்கையில் பிக்குகளுக்கு தனியான மாியாதை உண்டு. அவா்களை அமதித்தமையாலேயே முல்லைத்தீவு நீராவியடியில் பதற்றமான சூழல் உருவானது. அதற்கு காரணம் அரசியல் பின்பு லத்துடன் இங்கும் சட்டத்தரணிகளே. 

மேற்கண்டவாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இறந்த விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை அமைதியான 

ஓர் இடத்தில் தகனம் செய்யவே பிக்குகள் தீர்மானித்திருந்தார்கள். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகள் பிக்குகளை அவமதிக்கும் வகையில் செயற்பட்டார்கள்.

இந்தச் சட்டத்தரணிகள்தான் ஆலய நிர்வாகத்தினரையும் நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்று இந்த விவகாரத்தை ஊதிப்பெருக்கினார்கள். இது தேவையில்லாத நடவடிக்கை. அதற்காக நீதிமன்றத்தின் உத்தரவைவோ - தீர்ப்பையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை. 

களத்தில் என்ன நடந்தது என்று உண்மையில் எனக்குத் தெரியாது. எனினும், அண்மைக் காலங்களில் பிக்குகளை அவமதிக்கும் வகையில் - அவர்களைச் சீண்டும் வகையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு