தொண்டமனாறு கடல் வழியாக இலங்கைக்குள் நுழைந்த இந்தியா் உட்பட 6 போ் கைது..!

ஆசிரியர் - Editor I
தொண்டமனாறு கடல் வழியாக இலங்கைக்குள் நுழைந்த இந்தியா் உட்பட 6 போ் கைது..!

யாழ்.தொண்டமனாறு கடல் வழியாக இலங்கைக்குள் நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் இந்தியா் ஒருவா் உட்பட 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 

குறித்த பகுதியில் தரித்துநின்ற வேன் ஒன்றை பாதுகாப்பு பிரிவினர் சோதனை செய்தனர். இதன்போது வானிலிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் இருந்ததாகவும், 

அவரிடம் எந்தவொரு ஆவணமும் இருக்கவில்லை என்பதால் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரஜையை இலங்கைக்குள் அழைத்து வருவதற்கு உதவிய ஐவர் குறித்த வேனிலிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு