லஞ்சம் வாங்கும் அதிபா்களுக்கு ஆப்பு..! 35 மாணவா்களுக்கு மேல் ஒரு வகுப்பில் மாணவா்கள் இருக்க முடியாது. ஆளுநா் பணிப்பு..

ஆசிரியர் - Editor I
லஞ்சம் வாங்கும் அதிபா்களுக்கு ஆப்பு..! 35 மாணவா்களுக்கு மேல் ஒரு வகுப்பில் மாணவா்கள் இருக்க முடியாது. ஆளுநா் பணிப்பு..

வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியினை கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

2020ஆம் ஆண்டில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது பாடசாலைகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் 

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை அனுமதி தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. இதன்போது , பாடசாலைகளில் மாணவர்களை 

இணைத்துக்கொள்ளும் போது வகுப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தொகையை விட அதிகமாக காணப்பட்டதுடன் , 

அனுமதியின்றி மேலதிக பிரிவுகளும் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியினை மேற்கொள்ளும்போது 

மாகாண கல்வி அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட வகுப்பு பிரிவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டவேண்டும் என்றும் 

ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது என்றும் ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தனிப்பட்ட கவனத்தினை செலுத்தி மாகாண பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக சகல பாடசாலை அதிபர்களிற்கும் 

தெரிவித்து இவ்விடயத்தினை 2020ம் ஆண்டில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறும் இது தொடர்பான அறிக்கையினை சகல கல்விப் பணிப்பாளர்களிடமிருந்தும்

 பெற்று சமர்ப்பிக்குமாறும் கேட்டுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு