திருமண வீடொன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த வாகனம் விபத்து..! 6 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு.

ஆசிரியர் - Editor I
திருமண வீடொன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த வாகனம் விபத்து..! 6 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு.

கண்டி மாநகரசபைக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளான். 

கண்டியில் இடம்பெற்ற தமது உறவினரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு ஏறாவூர் நோக்கி வேன் ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்தபோது 

 வேகமாக பயணித்த ரேஸிங் கார் வேன் மீது மோதியதில் வேனில் உறக்க நிலையில் இருந்த சிறுவன் தூக்கி வீசப்பட்டதில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். 

விபத்தில் வேனில் பயணம் செய்த மற்றைய எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு