திடீரென வீதியின் குறுக்கே ஓடியவருக்கு நடந்த கதி..! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
திடீரென வீதியின் குறுக்கே ஓடியவருக்கு நடந்த கதி..! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்..

குருமன்காடு சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 40 வயதான குடும்பஸ்த்தா் ஒருவா் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

குருமன்காட்டு சந்தியில் பாதையின் மறுபக்கம் செல்ல முற்பட்ட நபரை மன்னார் வீதியுடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோதித்தள்ளியதில் 

இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் பாதையினை கடக்க முற்பட்ட 40 வயது மதிக்கத்தக்க திருநாவற்குளத்தினை சேர்ந்த சிதம்பரம் செல்லத்துரை என்ற நபர் 

படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து 50மீற்றர் தொலைவில் பாதசாரிகள் கடவை இருந்தும் பாதையினை கடக்க முற்பட்ட நபர் பாதசாரிகள் கடவையினை பயன்படுத்தாது 

 வீதியினுடாக அவதானமின்றி கடக்க முற்பட்ட சமயத்திலிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு