பிக்குவின் இறுதிச்சடங்கை பிள்ளையாா் ஆலயத்தில் நடாத்த கடற்படை, இராணுவம் தீவிரம்..! தடுத்து நிறுத்த மக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
பிக்குவின் இறுதிச்சடங்கை பிள்ளையாா் ஆலயத்தில் நடாத்த கடற்படை, இராணுவம் தீவிரம்..! தடுத்து நிறுத்த மக்கள் போராட்டம்..

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தை அபகாித்து பௌத்த விகாரை கட்டிய பௌத்த பிக்குவின் உடலை பிள்ளையாா் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய இராணுவம் மற்றும் கடற்படை தீவிரமாக முயற்சிக்கின்றது. 

கொலம்பகே மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக நேற்று மரணமடைந்தார்.இந்நிலையில் அவரின் இறுதி கிரியைகளை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் முன்னெடுக்க இராணுவம் மற்றும் கடற்படை 

ஏற்பாடுகளை செய்துவருகின்றது. இதனையடுத்து இதற்கு தடை கோரி ஆலய நிர்வாகத்தினர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு முறைப்பாடு செய்துள்ளனர். தடை உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு