பேருந்து மோதி நீண்டதுாரம் இழுத்து செல்லப்பட்ட இளைஞன் பலி..! தப்பி ஓடிய சாரதி மற்றும் நடத்துனா் கைது..

ஆசிரியர் - Editor I
பேருந்து மோதி நீண்டதுாரம் இழுத்து செல்லப்பட்ட இளைஞன் பலி..! தப்பி ஓடிய சாரதி மற்றும் நடத்துனா் கைது..

அனுராதபுரம்- தலாவ பகுதியில் நேற்றய தினம் மோட்டாா் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது பேருந்து மோதி நீண்ட துாரம் இழுத்து செல்லப்பட்ட இளைஞன் உயிாிழந்துள்ளான். 

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில், எப்பாவெல பிரதேசத்தில் தலாவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேருக்கு மோதியுள்ளது.

இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளை 300 மீற்றருக்கும் அதிக தூரம் இழுத்து சென்றே பேருந்து நின்றுள்ளது. பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாதமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்திலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தையடுத்து சாரதி மற்றும் நடத்துனர் 

அங்கிருந்து தப்பிச் சென்று பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் எப்பாவெல பொலிஸாார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு