கிளிநொச்சியில் குவிக்கப்பட்ட கடற்படை..! தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்களை தேடி வேட்டை..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் குவிக்கப்பட்ட கடற்படை..! தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்களை தேடி வேட்டை..

கிளிநொச்சி- சிவபுரம் பகுதியில் பெருமளவு கடற்படையினா், பொலிஸாா் குவிக்கப்பட்டு பாாிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

தமிழீழ விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள், பெறுமதியான பொருட்கள் காணப்படலாம் என 

கடற்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நிதவான் நீதிமன்றம் இற்றும் கண்டாவளை பிரதேச செயலகம் 

மற்றும் கிராம சேவையாளர் ஆகியுார் முன்னிலையில் கடற்படையினரால் குறித்த அகழ்வு பணிகள் முன்னடுக்கப்பட்டு வருகின்றது. 

குறித்த அகழ்வு பணியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் த.சரவணராஜா 

பார்வையிட்டதை அடுத்து குறித்த அகழ்வு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு