இலக்க தகடுகளற்ற வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்ட சமுா்த்தி பணிப்பாளா் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
இலக்க தகடுகளற்ற வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்ட சமுா்த்தி பணிப்பாளா் மீட்பு..!

மாத்தறை மாவட்டத்தில் இலக்க தகடுகளற்ற இரு வெள்ளை வாகனங்களில் கடத்தப்பட்ட சமுா்த் தி பணிப்பாளா் இரகசிய இடமொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாாினா ல் மீட்கப்பட்டிருக்கின்றாா். 

மீட்கப்பட்டவரை காலி- கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். மாத்தறை – ஊறுபொக்க பகுதியில் கடமையாற்றும் சமுா்த்தி பணிப்பாளா், பிரதீப் சுரங்க எதிரிசிங்க என்பவரே 

நேற்று, வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.பிரதீப் சுரங்க, தனது பிள்ளைகளை பாடசாலையில் விட்டுத் திரும்பிய போதே கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் அவரைக் கடத்திச் செல்வதற்கு 

வந்திருந்த இரு வெள்ளை வான்களில், இலக்கத் தகடுகள் காணப்படவில்லை எனவும் ஒரு வான், ஊறுபொக்க பகுதியை நோக்கியும் மற்றைய வான் அதன் எதிர்த்திசை நோக்கியும் பயணித்துள்ளதாகக் கூறப்பட்டது.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு