வெள்ளை வான் கடத்தல் ஆரம்பமா..? இலக்க தகடுகளற்ற வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்ட சமுா்த்தி பணிப்பாளா்..!

ஆசிரியர் - Editor I
வெள்ளை வான் கடத்தல் ஆரம்பமா..? இலக்க தகடுகளற்ற வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்ட சமுா்த்தி பணிப்பாளா்..!

மாத்தறை- ஊறபொக்க பெறலபனாத்தற கிராமத்தில் சமுா்த்தி பணிப்பாளா் ஒருவா் வெள்ளை வாகனத்தில் வந்த கும்பலினால் இன்று காலை கடத்தி செல்லப்பட்டிருக்கின்றாா். 

பிரதீப் சுரங்க எதிரிசிங்க என்ற 45 வயதுடைய நபரே இவ்வாறு கடத்தில் செல்லப்பட்டதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர். 

தனது இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையில் விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த போதே இவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.

கடத்திச்செல்ல இரண்டு வெள்ளை வான்கள் வந்திருந்ததாகவும், அவை இரண்டிலும் இலக்கத்தகடுகள் இருக்கவில்லை என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடத்தல் இடம்பெற்ற பகுதியில் பொருத்தப்பட்ட சி.சி.ரி.வி காணொளிகளைக் கொண்டு விசாரணைகளை ஊருபொக்க பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு