ஊடகவியலாளா் சண்முகம் தவசீலனுக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிாிவினால் மீண்டும் விசாரணை அழைப்பு..!

ஆசிரியர் - Editor I
ஊடகவியலாளா் சண்முகம் தவசீலனுக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிாிவினால் மீண்டும் விசாரணை அழைப்பு..!

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளா் சண்முகம் தவசீலனை விசாரணைக்கு வருமாறு பயங்க ரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் அழைப்பு விடுத்துள்ளனா். 

குறித்த அழைப்பு கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் தங்களின் வாக்குமூலம் ஒன்று 

அவசியம் தேவைப்படுவதால் செப்ரெம்பர் 25 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு 2 ஆம் மாடி புதிய செயலக கட்டடம் கொழும்பு 01 

என்ற முகவரிக்கு ஊடகவியலாளர் தவசீலனை சமூகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - பனிக்கன்குளம் – மாங்குளம் என்ற முகவரியில் அமைந்துள்ள

 ஊடகவியலாளரின் வீட்டிற்கு நேரடியாக சென்ற பொலிஸார் விசாரணைக்கான அழைப்பு கடிதத்தை கையளித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு