கூட்டமைப்பின் அங்கதனாக கோட்டாவை சந்திக்கிறாா் சுமந்திரன்..! அடுத்தகட்டம் சம்மந்தன் களத்தில் இறங்குவாராம்..

ஆசிரியர் - Editor I
கூட்டமைப்பின் அங்கதனாக கோட்டாவை சந்திக்கிறாா் சுமந்திரன்..! அடுத்தகட்டம் சம்மந்தன் களத்தில் இறங்குவாராம்..

ஜனாதிபதி வேட்பாளா்கள் அனைவரையும் சந்திக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தீா்மானத்தி ன் பிரகாரம் கோட்டாபாய ராஜபக்ஸவை சந்திக்க திகதி குறிக்கப்படுவதாக கூட்டமைப்பின் நா டாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கின்றது. 

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போதே இது தொடர்பிலும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முன்பு இரு தடவைகள் கட்சி ரீதியாக கோத்தபாய ராயபக்ஸ உரையாடினார். தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு சந்திப்பிற்கு கோரியுள்ளார். இதற்கமைய விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 

கோத்தபாய ராயபக்சாவை சந்திப்பார். அவ்வாறு சுமந்திரனின் சந்திப்பையடுத்து நானும் சந்திப்பேன் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு