14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..! கிளிநொச்சியில் பொலிஸாா் வேட்டை..

ஆசிரியர் - Editor I
14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..! கிளிநொச்சியில் பொலிஸாா் வேட்டை..

கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் கொள்ளையா்களை இலக்குவைத்து பொலிஸாா் நடாத்திய வேட்டையில் 13 டிப்பா்கள் மற்றும் ஒரு உழவு இயந்திரம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அனுமதிப்பத்திரங்கள் இன்றியும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறியும் போலி அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி 

மணல் கொண்டு சென்றமை போன்ற குற்றச்சாட்டுக்களில் 13 டிப்பர் வாகனங்களும் ஒரு உழவு இயந்திரமும் அதன் சாரதிகளும் பளைப்பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யபப்ட்டுள்ளவர்களையும் டிப்பர் வாகனங்களையும் நாளைய தினம் (18) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் 

பளைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு