கட்டுப்பாடற்ற வேகம்..! இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம்..! இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..

தவசிகுளம் பகுதியில் மிதமிஞ்சிய வேகத்தினால் மதகுடன் மோதிய மோட்டாா் சைக்கிள் துாக்கி வீசப்பட்டதில் இருவா் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டிருக்கின்றனா். 

இன்று மாலை தவசிகுளத்திலிருந்து கோவில்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தவசிகுளம் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் சென்று கொண்டிருந்தபோது வீதியின் அருகே இருந்த மதகுடன் மோதியதிலேயே 

குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 19, 21 வயதுடைய மகாறம்பைகுளம் மற்றும், கோவில்குளம் பகுதிகளை சேர்ந்த இருவர் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன் 

இருவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு