நாமலின் திருமணத்திற்காக நிா்மாண பணிகள் நிறைவடைய முன் திறக்கப்பட்ட வீதி..! ஒருவா் பலி, இருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
நாமலின் திருமணத்திற்காக நிா்மாண பணிகள் நிறைவடைய முன் திறக்கப்பட்ட வீதி..! ஒருவா் பலி, இருவா் படுகாயம்..

நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ஸவின் திருமணத்திற்காக மாத்தறை- ஹம்பாந்தோட் டை இடையிலான அதிவே நெடுஞ்சாலையில் ஒரு பகுதி நிா்மாண பணிகள் நிறைவடைய முன் திறக்கப்பட்ட நிலையில், இந்த வீதியால் பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தினால் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், மேலும் இருவா் படுகாயமடைந்துள்ளனா். வீதி யை மறைத்து வைக்கப்பட்டிருந்த தூணில் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் கார் முழுமையாக சேதமடைந்துள்ளது.பொதுவாக நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவு 

செய்யாமல் அதிவேக நெஞ்சாலையின் நுழைவு வீதி திறந்து வைக்கப்படாது.நிர்மாணிப்பு நடவடிக்கையின் போது அவை மூடியே வைக்கப்படும். எனினும் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என 

பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.எனினும் நாமலின் திருமண நிகழ்வு நிறைவடைந்த பின்னர் குறித்த வீதி மூடப்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு