இரு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி விபத்து..! இருவா் படுகாயம்.

ஆசிரியர் - Editor I
இரு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி விபத்து..! இருவா் படுகாயம்.

கொழும்பு- ஹொறண பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. பண்டாரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து ஒன்றும் 

கொழும்பிலிருந்து கெஸ்பேவவிற்கு சென்ற தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் சொகுசு பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்கக்ப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு