முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள், சீருடைகள்!

ஆசிரியர் - Admin
முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள், சீருடைகள்!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில், இன்று காலை, பொதி செய்யப்பட்டு, புதைக்கபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள், சீரூடைகள் மீட்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் பகுதியில், ஒருவர் தனது காணியை கனரக இயந்திரம் கொண்டு துப்புரவு செய்த போது, நிலத்தில் புதைந்திருந்த நிலையில் காணப்பட்ட பையை எடுத்து பார்த்தபோது, அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள் இருந்துள்ளன.

இது தொர்பில், காணி உரிமையாளர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார், தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு புலிக் கொடிகளையும் 2 இராணுவ சீருடைகளையும் இரண்டு தொப்பிகளையும் மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட இராணுவச் சீருடைகளில் ஒன்று, சிறுவர் ஒருவரின் அளவில் காணப்பட்டது. மீட்கப்பட்ட கொடிகளும் உடைகளும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில், நாளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு