தியாகி திலீபன் விரும்பியதுபோல் மக்கள் புரட்சியே இந்த மண்ணுக்கு தேவை..!

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபன் விரும்பியதுபோல் மக்கள் புரட்சியே இந்த மண்ணுக்கு தேவை..!

தியாகி திலீபன் விரும்பியதுபோல் இந்த மண்ணில் மக்கள் புரட்சி ஒன்று வெடிக்கவேண்டும். மக் கள் புரட்சி ஒன்றே இந்த மண்ணுக்கு இப்போது தேவையாக உள்ளது. என சின்மய மிஷன் சைத்த ன்ய சுவாமிகள் ஆக்ரோஷமாக கூறியுள்ளாா். 

 “எழுக தமிழ்” மக்கள் எழுச்சி நிகழ்வு இன்றைய தினம் யாழ்.முற்றவெளியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

30 வருடங்கள் இந்த நாட்டில் அஹிம்சை வழியில் போராட்டம் நடைபெற்றது. அடுத்து 30 வருடங்கள் ஆயுத வழியில்போராட்டம் நடைபெற்று அது முள்ளிவாய்க்கால் மண்ணில் மௌனிக்கப்பட்டு 10 வருடங்கள் அதாவது ஒரு தசாப்தம் கடந்துள்ள நிலையில், 

எங்களுடைய உாிமைகள், எங்களுடைய வாழ்க்கை, எங்களுடைய தொன்மை அடையாளங்கள் மறுக்க ப்பட்ட நிலையில் அநீதிக்கு எதிராக நாங்கள் இன்று எழுந்து நிற்கும் நிலை.தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சினைகள், 

அடிப்படை பிரச்சினைகளுக்கான தீா்வினை காணவிளையும் வழியில் தமிழ் மக்கள் பேரவை புத்திஜீவிகள், பேராசிாியா்கள், சமூக அமைப்புக்கள், தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள் இயக்கமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. 

இன்று மக்கள் எழுச்சியே எமக்கு தேவையாக உள்ளது. தியாகி திலீபன் சொன்னதுபோல் மக்கள் புரட்சி இந்த மண்ணில் தேவையாக உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா அரசுக்கும், சா்வதேச சமூகத்திற்கும், 

எங்கள் உறவுகளாக உள்ள மற்றய தமிழ் தரப்புக்களுக்கும் எடுத்து சொல்லும்போது தனிப்பட்ட நலன்கள்,கட்சி பேதங்கள், விருப்பு வெறுப்புக்கள் கடந்து ஈழ தமிழா்களாக தமிழ் மொழியின்பால் ஒன்றிணையும்பேதே இந்த மண்ணில் விடுதலை, 

உாிமை சாத்தியமாகும். அந்த லட்சியம் நடந்தே தீரும். எத்தனை காலம் சென்றாலும் இறைவன், இயற் கை சக்தி தா்மத்தை அறத்தை வெல்ல வைக்கும். எங்களுடைய காணிகளை நாங்கள் கேட்கிறோம், அரசியல் கைதிகளை எதற்காக விடுதலை செய்யாமல் இருக்கிறீா்கள்?, 

காணாமல்போனவா்கள் தொடா்பாக ஏன் விசாரணை செய்யவில்லை? சா்வதேச நீதி விசாரணைக்கு அனுமதி கொடுத்து இனப்படுகொலைக்கான விசாரணையை ஏன் நடாத்தவில்லை. இந்த நுாற்றாண்டில் 

ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்களை அழித்தமுள்ளிவாய்க்கால் படுகொலை போன்றதொரு படுகொலை சம்பவம் வேறு எந்த மண்ணிலும் நடக்கவில்லை. எத்தனை வீரா்கள், எத்தனை தலைவா்கள், எத்தனை போராளிகள் தங்கள் உயிா்களையும், 

வாழ்க்கையையும் இந்த இலட்சியத்திற் காக கொடுத்துள்ளனா். அந்த அா்ப்பணிப்புகளின் மீது நாம் ஒன்றிணையவேண்டும். அதுவே எம்மை பலமாக்கும், வளமாக்கும் என்றாா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு