தென்மராட்சியில் 14 உணவகங்கள் மீது திடீா் சோதனை..! 11 உணவகங்கள் சிக்கின, 4 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
தென்மராட்சியில் 14 உணவகங்கள் மீது திடீா் சோதனை..! 11 உணவகங்கள் சிக்கின, 4 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை..

பொதுமக்கள் வழங்கிய தொடா்ச்சியான முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டு ஆளுநா் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் தென்மராட்சி பகுதியில் 14 உணவகங்கள் மீது சுகாதார பிாிவு இன்று திடீா் சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றது. 

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள உணவகங்களில் நடைபெற்ற இந்த பரிசோதனையின் போது சட்டத்திற்கமைவாக உணவகங்கள் இயங்குகின்றனவா என்பதுடன் 

உணவகங்களின் தரம் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது 11 உணவகங்கள் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்டதுடன் உணவுகள் தயாரிக்கும் பகுதிகள் மிகவும் சுத்தமற்று காணப்பட்டன. இவற்றில் அதிகளவிலான 

சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 04 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் 2 உணவங்களில் காணப்பட்ட தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன் , ஏனைய உணவகங்களை மிகவும்

தகுதிவாய்ந்த உணவகங்களாக மாற்றியமைப்பதற்கான கால அவகாசம் சாவகச்சேரி பொதுசுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டது. குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்ற தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் 

பொதுசுகாதார அதிகாரிகளினால் உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஒரு உணவு மருந்து பரிசோதகருடன் ஆறு பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு