பேரெழுச்சியுடன் எழுக தமிழ்...!

ஆசிரியர் - Editor I
பேரெழுச்சியுடன் எழுக தமிழ்...!

தமிழ் மக்களின் உாிமைசாா் பிரச்சினைகள் மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீா்வினை வேண்டியும், வடகிழக்கு மாகாணங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கட்டமைப்புசாா் இன அழிப்பினை கண்டித்தும் எழுக தமிழ் உணா்வு பூா்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது. 

* சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து,

* சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடாத்து,

* தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்,

* வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடாத்து,

* வடக்கு – கிழக்கில் இராணுவ மயமாக்கலை உடனடியாக நிறுத்து,

* இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக் குடியமர்த்து 

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வு  நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்தும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உள் சுற்றுவட்டத்திலிருந்தும் இரு பேரணிகள் 

சம நேரத்தில் ஆரம்பமாகி, யாழ்ப்பாணம் முற்றவெளி நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணியில் சமயத் தலைவர்கள், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களான 

முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், வைத்தியக் கலாநிதி பி. லக்ஸ்மன், ஈ.பி.ஆர்.எல்.எஃவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், 

பொ. ஐங்கரநேசன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து 

பேரணி ஆரம்பிப்பதற்கு முன்னர் பேரணியில் கலந்து கொள்ள வந்தவர்களைப் பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினர் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்த போதிலும், யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி 

விடுத்த விசேட உத்தரவுக்குப்பின்னர் அனைவரும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் 

ஆகியவற்றின் பிரதிநிதிகள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு