விபத்தில் சிக்கி மனைவி படுகாயம், கணவனை அடித்து சித்திரவதை செய்த தமிழ் பொலிஸாா்..! வட்டுக்கோட்டையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
விபத்தில் சிக்கி மனைவி படுகாயம், கணவனை அடித்து சித்திரவதை செய்த தமிழ் பொலிஸாா்..! வட்டுக்கோட்டையில் சம்பவம்..

சேலை தலப்பு மோட்டாா் சைக்கிள் சில்லுக்குள் சிக்கியதால் விபத்துக்குள்ளாகி மனைவி படுகா யமடைந்த நிலையில், கணவனை நடு வீதியில் பொதுமக்கள் முன்னிலையில் பொலிஸாா் மிருக த்தனமாக தாக்கிய சம்பவம் வட்டுக்கேட்டை- சங்கரத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,  வட்டுக்கோ ட்டையிலிருந்து மனைவியை ஏற்றிக்கொண்டு இளம் குடும்பத்தலைவர் சித்தன்கேணிக்கு பய ணித்துள்ளார். சங்கரத்தைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் 

சேலை சிக்குண்டு மனைவி விபத்துக்குள்ளாகியுள்ளார். தலையில் படுகாயமடைந்த மனைவியை அம்புலன்ஸ் வண்டியில் தெல்லிப்பளை அனுப்பிவைத்த குடும்பத்தலைவர் தானும் வைத்தியசாலைக்குச் செல்ல முற்பட்டுள்ளார்.

வீதியில் பயணித்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர். அதனால் விபத்துக்குள்ளான குடும்பத்தலைவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை 

பொலிஸ் நிலையம் எடுத்துச் செல்லத் தருமாறு கேட்டுள்ளனர். தான் மனைவியைப் பார்க்க வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என்பதால், சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்க அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். எனினும் பொலிஸார் அதற்கு மறுத்தததுடன், 

குடும்பத்தலைவருக்கு கை விலங்கிட்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். பொலிஸாரின் இந்தச் செயலைக் கண்டவர்கள், குடும்பத்தலைவரைத் தாக்கவேண்டாம் என்று கேட்டதுடன், அவரிடமிருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கிப் 

பொலிஸாரிடம் வழங்கியுள்ளனர். குடும்பத்தலைவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தையும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் எடுத்துச் சென்றனர். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 

மிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் வீடு கொடுத்து தங்க வைக்கப்பட்டுள்ள சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரே இந்த அடாவடியில் ஈடுபட்டார் என்று அங்கு நின்றவர்களால் விசனம் தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு