மருத்துவா்களும், தாதியா்களும் சுற்றுலா செல்வதற்காக இழுத்து மூடப்பட்ட அவசர சிகிச்சை பிாிவு..!

ஆசிரியர் - Editor I
மருத்துவா்களும், தாதியா்களும் சுற்றுலா செல்வதற்காக இழுத்து மூடப்பட்ட அவசர சிகிச்சை பிாிவு..!

மருத்துவா்கள் மற்றும் ஊழியா்கள் சுற்றுலா செல்வதற்காக வவுனியா பொது வைத்தியசாலை யின் அவசர சிகிச்சை பிாிவு நேற்றய தினம் இழுத்து மூடப்பட்ட அவலம் நடந்துள்ளது. 

வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்து வா்கள், தாதியர்கள் உள்ள பணித் தொகுதியினர் சுற்றுப் பயணம் சென்றமையினால் 

நேற்று முன்தினம் மாலையுடன் சிகிச்சை பிாிவு  இழுத்து மூடப்பட்டுள்ளது. இவ்வாறு மூடப்பட்ட பிரிவில் இருந்த நோயாளி விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இதேநேரம் வைத்தியசாலையின் முக்கியத்துவம் மிக்க இரு பணித் தொகுதிகளும் இவ்வாறு பொறுப்பற்ற தனமாக சுற்றுலா செல்வதற்காக இழுத்து மூடப்பட்டமை தொடர்பில் 

கடும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இடம்பெற்றதாக கூறப்படுவது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் நந்தகுமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

நீண்டகாலமாக திட்டமிட்ட ஓர் பயணம் என்பதனால் பயணித்தனர் . இருப்பினும் அனைவரும் சொந்த விடுமுறையில் பயணித்தனர். 

இதேநேரம் உடனடியாக நாளை ( இன்று ) குறித்த விடுதி திறக்கப்படும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு