ஈகையால் உயா்ந்தவனின் 32ம் ஆண்டு நினைவேந்தல்..! கண்ணீருடன் அஞ்சலி..

ஆசிரியர் - Editor I
ஈகையால் உயா்ந்தவனின் 32ம் ஆண்டு நினைவேந்தல்..! கண்ணீருடன் அஞ்சலி..

மாவீரன் தியாகி திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நல்லுாா் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் இன்று கட்சி பேதங்களை கடந்து உணா்வெழுச்சியுடன் நடைபெற்றிருக்கின்றது. 

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில், தியாகி திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்ட நேரமான காலை 9.45 மணிக்கு பொதுச் சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பொதுச் சடரினினை மாவீரர் தேவானந்தனின் தாயார் ஏற்றிவைக்க, தியாகி திலீபனின் உருவப் படத்துக்கான தியாகச் சுடரை மாவீரர் சஞ்சீவனின் சகோதரன் ஏற்றி வைத்தார். 

தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளின்றி மிகவும் உணர்வு பூர்வமாக மலரஞ்சலி செலுத்தி, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர். 

யாழ். மாநகர முதல்வர், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி,தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மண்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாகவும் உணர்வு பூர்வமாகவும் நிணைவேந்தல் அனுஸ்ரிக்கப்பட்டது.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு