யாழ்.அரியாலையில் விசேட அதிரடிப்படை துப்பாக்கி சூடு..! இளைஞன் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலையில் விசேட அதிரடிப்படை துப்பாக்கி சூடு..! இளைஞன் படுகாயம்..

யாழ்.அரியாலையில் விசேட அதிரடிபடையினர் நடாத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ்.நகரை அண்டிய பகுதியில் உள்ள இளைஞரே தொடை பகுதியில் துப்பாக்கி சூடு பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக தகவலுக்கு இணைந்திருங்கள்..

2ம் இணைப்பு...

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காலில் காயமடைந்துள்ளனர்.

அரியாலை முள்ளி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை குறித்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

அரியாலை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர். 

அதன் போது மணல் அகழ்வில் ஈடுபட்ட ஏனையவர்கள் தப்பி சென்ற நிலையில் உழவு இயந்திர சாரதி அதிரடி படையினரை நோக்கி உழவு இயந்திரத்தை வேகமாக செலுத்தி சென்ற வேளை அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

அதன் போது அரியாலை முள்ளி பகுதியை சேர்ந்த கி.சஜீவன் (வயது 20) எனும் நபர் காலில் காயமடைந்துள்ளார். காலில் காயமடைந்த நபரை அங்கிருந்து மீட்டு 

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த விசேட பொலிஸ் அதிரடி படையினர் உழவு இயந்திரத்தை மணலுடன் கைப்பற்றி யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பான போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , சம்பவத்தில் தப்பி சென்ற ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு