நெடுங்கேணியில் கனமழையுடன் மினி சூறாவளி..! வீடுகள் சேதம், மரங்கள் முறிந்து விழுந்தன..

ஆசிரியர் - Editor I
நெடுங்கேணியில் கனமழையுடன் மினி சூறாவளி..! வீடுகள் சேதம், மரங்கள் முறிந்து விழுந்தன..

நெடுங்கேணி பகுதியில் நேற்றய தினம் கன மழையுடன் மினி சூறாவளி வீசியமையால் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 

நேற்று மாலை நெடுங்கேணியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்த போதே மினி சூறாவளி ஏற்பட்டது. அத்துடன் வீதியோர மரங்களும் சரிந்து விழ்ந்திருந்ததால் 

போக்குவரத்தும் சற்று நேரம் ஸ்தம்பிதமடைந்திருந்தது.இவ்வாறு திடீரென வீசிய மினி சூறாவளியுடன் கூடிய மழையினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் 

பயன்தரு மரங்களான தென்னை, வாழை மற்றும் பல மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.இப் பகுதியில் கடுமையான மழை பெய்திருந்ததாகவும், 

இடி வீழ்ந்து மரங்கள் முறிந்திருந்ததாகவும், வீடுகள் பகுதியளவு சேதமைந்துள்ளதுடன் வீடு மற்றும் கடைகளில் இருந்த பொருட்கள் மழையினால் நனைந்துள்ளதாகவும் 

கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு