இலங்கை வங்கியின் பண பாிமாற்று இயந்திரத்தை உடைத்து திருட முயற்சித்த கரைச்சி பிரதேசசபை ஊழியா் பணி நீக்கம்..!

ஆசிரியர் - Editor I
இலங்கை வங்கியின் பண பாிமாற்று இயந்திரத்தை உடைத்து திருட முயற்சித்த கரைச்சி பிரதேசசபை ஊழியா் பணி நீக்கம்..!

கிளிநொச்சி- முழங்காவில் பகுதியில் இலங்கை வங்கியின் பண பாிமாற்று இயந்திரத்தை உடைத்து திருட முயற்சித்த பிரதேசசபை ஊழியா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். 

முழங்காவில்- நாச்சிக்குடா சந்தியில் இலங்கை வங்கிக்கு சொந்தமான தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தை உடைத்து களவாட முயன்றனர் 

என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் முழங்காமல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். குறித்த இயந்திரப் பகுதிக்குள் கடந்த 2ம் திகதி இரவு 

6 போ் வந்து நீண்ட நேரம் இயந்திரத்தை உடைக்க முற்பட்ட நிலையில் இறுதியில் முயற்சி தோல்வியடைந்த நிலையில் வெளியேறியுள்ளனர்.

இருப்பினும் இவ்வாறு இயந்திரத்தை உடைக்க முயன்ற மற்றும் ஏனைய செயற்பாடுகளில் ஈடுபட்டமை வங்கியில் ஒளிப்படம் ஆகியிருக்கிறது.

இவ்வாறு பதிவாகிய புகைப்படங்களின் உதவியுடன் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரதேச சபை ஊழியர் 

எனவும் தெரிவிக்கப்பட்டது. இவர்களிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு இடம்பெறும் நிலையில் குறித்த பணியாளரை சபை இடைநிறுத்தம் செய்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு