ஒரு நாளில் 3 விபத்து, 3 போ் உயிாிழப்பு..! இருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
ஒரு நாளில் 3 விபத்து, 3 போ் உயிாிழப்பு..! இருவா் படுகாயம்..

இலங்கையில் 3 பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 3 போ் உயிாிழந்துள்ளது டன் 2 போ் படுகாயமடைந்துள்ளனா். 

பொத்துவில் ,கடவத்தை மற்றும் றாகம ஆகிய பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களிலேயே இவ்வாறு சிறுவன் ஒருவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 

இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பொத்துவில்

பொத்துவில் - சியல்பலான்டுவ வீதியில் மாலை இருவர் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்று தூண் ஒன்றுடன் மோதி 

விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த ஓட்டுனரும் , பின்னால் சென்ற சிறுவனும் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், 

பின்னால் சென்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.பதுளை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 

கடவத்தை

கடவத்தை - கிரிமெட்டியாகார வீதியில் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துச் சென்று தொலைப்பேசி தூணுடன் மோதி விபத்து 

இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் பின்னால் சென்ற இளைஞனும் 

றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் , ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். கடவத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் 

என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

றாகம

றாகம - ஹூணுப்பிட்டி வீதியில் இரவு கார் ஒன்று பாதசாரதி ஒருவரின் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த பாதசாரதி றாகம் 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மடவல - உல்பத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய 

 நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு