பலாலி விமான நிலையத்திற்கு வருகிறது இந்திய நிபுணா்கள் குழு..!

ஆசிரியர் - Editor I
பலாலி விமான நிலையத்திற்கு வருகிறது இந்திய நிபுணா்கள் குழு..!

பலாலி விமான நிலையத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவிலிருந்து தொழிநுட்ப நிபுணா்கள் குழு ஒன்று அடுத்தவாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக த ஹிந்து பத்திாிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது. 

பலாலியில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மும்முரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒக்ரோபர் நடுப்பகுதியில் 

விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தில் இருந்து, கொச்சி, மும்பை, புதுடில்லிக்கான சேவைகள் தொடங்கப்படவுள்ளன.போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து 

அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பலாலி விமான நிலையத்தின் 

வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்தவாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக, கொழும்பிலுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலாலி விமான நிலையத்தை கூட்டாக அபிவிருததி செய்வதற்கு இந்தியாவிடம் இருந்து கொடை உதவிகள் கிடைப்பதற்கு சாத்தியங்கள் உள்ள போதிலும், அதுபற்றி கலந்துரையாடப்பட்ட போதிலும், எந்த அதிகாரபூர்வ உடன்பாடும் 

இதுவரை கையெழுத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு