யாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து திருட்டு..! பிரபல பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது.

ஆசிரியர் - Editor I
யாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து திருட்டு..! பிரபல பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது.

யாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையி ட்ட இருவா் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையைப் பயன்படுத்தப்பட்டது. அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப் பயன்படுத்துபவர் கண்டறியப்பட்டார். 

அவரை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் 19 மற்றும் 20 வயதுடையவர்கள். அவர்கள் கோப்பாயைச் சேர்ந்தவர்கள். சந்தேகநபர்களிடமிருந்து 10 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன 

என்று பொலிஸார் தெரிவித்தனர். கந்தர்மடம் பலாலி வீதியின் ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள அலைபேசி விற்பனை நிலையத்திற்குள் கடந்த 31ஆம் திகதி 

அதிகாலை 1.30 மணியளவில் கதவுடைத்து உட்புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த அலைபேசிகளை திருடிச் சென்றனர்.

18 அலைபேசிகள் திருடப்பட்டன என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.அந்த விற்பனை நிலையத்தில் சிசிரிவி கமராக்கள் 

பொருத்தப்பட்டிருந்த நிலையில் முகத்தினை துணியால் மூடிக் கட்டியவாறு திருடர்கள் உள்நுழைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. 

கடையில் நீண்ட நேரம் தேடுதலில் ஈடுபட்டு அலைபேசிகளைத் திருடிய திருடன் ஒருவன் அங்கிருந்து வெளியேறும் சமயம் கைவிரல் அடையாளம் கண்டு 

கொள்ளமுடியாதவாறு ஓர் துணியினால் தான் கையாண்ட பொருள்கள் மற்றும் இடங்கள் அனைத்தையும் சுத்தம் செய்தமை சிசிரிவி பதிவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு