ஆட்டோவுடன் கணவன், மனைவி, பிள்ளையை கடத்த முயற்சித்தவா் பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டாா்..!

ஆசிரியர் - Editor I
ஆட்டோவுடன் கணவன், மனைவி, பிள்ளையை கடத்த முயற்சித்தவா் பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டாா்..!

உடவல பகுதியில் முச்சக்கர வண்டியை சாரதி அவருடைய மனைவி மற்றும் குழந்தையுடன் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்களால் குறித்த முச்சக்கரவண்டி வழிமறித்து கடத்த முற்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியை கடத்த முற்பட்டதை அவதானித்த 

அப்பிரதேச மக்கள் உடனடியாக செயற்பட்டு கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.அத்தோடு கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை பிரேதச மக்கள் பிடித்து 

பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பி ஓடியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு