முள்ளிவாய்க்கால் குண்டு வெடிப்புக்கு காரணம் என்ன..? பொலிஸாா் இப்படியும் சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் குண்டு வெடிப்புக்கு காரணம் என்ன..? பொலிஸாா் இப்படியும் சந்தேகம்..

முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடா்பான விசார ணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், மண்ணில் புதைந்திருந்த வெடிபொருள் ஏதாவது வெடித் திருக்கலாம். என பொலிஸாா் கூறியிருக்கின்றனா். 

குறித்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து முள்ளிவாய்க்கால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.அந்த பிரதேசத்தில் இராணுவத்தின் 681ஆவது படையணி அமைந்துள்ளது. 

இருந்த போதிலும் படைத்தரப்பில் எந்தவொரு பயிற்சியோ இடம்பெறவில்லை என்று தெளிவுகூறப்பட்டுள்ளது.எனினும் முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள காடு ஒன்றில் இவ்வாறு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும், 

இனந்தெரியாத நபர் ஒருவர் காட்டில் தீ மூட்டியபோது மண்ணில் புதைந்திருந்த வெடிபொருள் ஏதாவது வெடித்துச் சிதறியிருக்கலாம் என்றும் பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு