பொலிஸ் நிலையத்திலிருந்து துப்பாக்கியை திருடிய இராணுவம்..! இரு இராணுவ சிப்பாய்கள் உள்ளிட் 5 போ் சிக்கினா்..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் நிலையத்திலிருந்து துப்பாக்கியை திருடிய இராணுவம்..! இரு இராணுவ சிப்பாய்கள் உள்ளிட் 5 போ் சிக்கினா்..

பாணந்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து துப்பாக்கி திருடிய இரு இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்குரஸ்ஸ பகுதியிலிருந்து துப்பாக்கியும் மீட்கப்பட்டிருக்கின்றது. 

மேற்படி தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிகளுடன் இராணுவத்தின் பாணந்துறை முகாமை சேர்ந்த இரண்டு இராணுவத்தினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி, மோட்டார்சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் சம்பந்தமாக நடத்தி வரும் விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கு அமைய 

துப்பாக்கிகளுடன் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈஸ்டர் தாக்குதலின் பின் கடமைக்கு சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர், இந்த துப்பாக்கிகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு