புதுக்குடியிருப்பில் இராணுவ சிப்பாய்கள் மீது மூா்க்கத்தனமான தாக்குதல்..! பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட இராணுவம், இளைஞன் கைது..

ஆசிரியர் - Editor I
புதுக்குடியிருப்பில் இராணுவ சிப்பாய்கள் மீது மூா்க்கத்தனமான தாக்குதல்..! பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட இராணுவம், இளைஞன் கைது..

புதுக்குடியிருப்பு- மந்துவில் பகுதியில் படையினா் மீது இளைஞா் குழு ஒன்று நேற்று இரவு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்ற நிலையில் இன்றைய தினம் இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். 

நிறைந்த மதுபோதையில் இராணுவ முகாம் வீதியால் சென்ற இளைஞா் குழு இராணுவத்தினரை வம்புக்கு இழுத்துள்ளதுடன் அங்கிருந்த இராணுவ சிப்பாய்களை மூா்க்கத்தனமாக தாக்கியுள்ளது. 

இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான படையினா் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனா். இந்த முறைப்பாட்டுக்க அமைவாக இன்றைய தினம் காலை

விசேட தேடுதல் நடவடிக்கையில் இறங்கிய பொலிஸாா் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியை சோ்ந்த இளைஞா் ஒருவரை சந்தேகத்தின் பெயாில் கைது செய்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு