ஐ.தே.கட்சிக்குள் பிளவா..? அது நடக்காது..! ஐக்கிய இலங்கைக்குள் தமிழா்களுக்கு அதிகார பகிா்வை வழங்குவேன். சஜித் முழக்கம்.

ஆசிரியர் - Editor I
ஐ.தே.கட்சிக்குள் பிளவா..? அது நடக்காது..! ஐக்கிய இலங்கைக்குள் தமிழா்களுக்கு அதிகார பகிா்வை வழங்குவேன். சஜித் முழக்கம்.

பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் பூரண அதிகார பகிா்வை வழங்குவேன் என அமைச்சா் சஜித் பிறேமதாஸ யாழ்ப்பாணத்தில் கூறியிருக்கின்றாா். 

எண்டபிறைஸஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியை பாா்வையிடுவதற்காக இன்று யாழ்ப்பாணம் வந்த அமைச்சா் சஜித் பிறேமதாஸ ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே 

மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் பூரண அதிகாரத்தை வழங்குவோம் 

என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம். 

அந்த நிலைப்பாட்டின்தான் நாம் இருக்கிறோம்.தற்போது கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை விரைவில் தீர்க்கவே நாம் முயற்சித்து வருகிறோம். 

மக்கள் தான் இறுதித் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். நான் கட்சியின் பிரதித்தலைவராக இருக்கிறேன்.எனவே, ஜனாதிபதித் தேர்தலில் நான் களமிறங்குவேன் 

என்பதில் உறுதியாக இருக்கிறேன். அவ்வாறு களமிறங்கினால், வெற்றி உறுதி என்பதையும் நான் இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.

நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விசேட சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளேன். உண்மையில், எமக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. 

நாம் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். என கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு