போதைப் பொருள் வியாபாரம் நடத்தும் தேவை வே.பிரபாகரனுக்கு இல்லை..! ஜனாதிபதியை செருப்பால் அடித்த எம்.ஏ.சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
போதைப் பொருள் வியாபாரம் நடத்தும் தேவை வே.பிரபாகரனுக்கு இல்லை..! ஜனாதிபதியை செருப்பால் அடித்த எம்.ஏ.சுமந்திரன்..

போதைப் பொருள் வா்த்தகம் செய்யும் தேவை தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபா கரனுக்கு இருக்கவில்லை. என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன், தமிழா்களின் உாிமை போராட்டத்தை ஜனாதிபதி கொச்சை படுத்துவதாக சாடியுள்ளாா். 

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய போராட்டத்திற்கு 

தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது. குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழர்கள் அதற்கு பெருமளவான நிதிப்பங்களிப்பை செய்திருக்கிறார்கள். 

இந்த வரலாறு தெரியாமல் ஜனாதிபதி இப்படி கூறுவது முற்று முழுதான தவறு. அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 

இது ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஒரு பொய்த்தகவல். இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை” என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு