தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரன் போதைப் பொருள் வியாபாாிகளுடன் நேரடி தொடா்பில் இருந்தாராம்..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரன் போதைப் பொருள் வியாபாாிகளுடன் நேரடி தொடா்பில் இருந்தாராம்..!

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நேரடி தொடர்பு கொண்டு இருந்தமையின் ஊடாகவே ஆயுதங்களை பெற்றுக் கொண்டு 30 வருட கால சிவில் யுத்தத்தை முன்னெடுத்து சென்றார். 

மேற்கண்டவாறு ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா். தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார செய்திட்டத்தின் இறுதி தின நிகழ்வு இன்று சுஹததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இந்நிகழ்வில் மேலும் அவா் கூறுகையில், இலங்கையின் உள்விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம், உள்ளிட்ட சர்வதேச சமூகம் தலையிடுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல்.

மரண தண்டனையினை அமுல்படுத்தினால் ஜி. எஸ்.பி வரிச்சலுகை உள்ளிட்ட சர்வதேச சலுகைகள் இரத்து செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் குறிப்பிடுவது எமது நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு விடுக்கும் 

அச்சுறுத்தல்களாகவே காணப்படும். மரண தண்டனையினை நிறைவேற்றுவதாக தீர்மானித்தமை நாட்டு மக்களின் தனிப்பட்ட நலன்களை மையப்படுததியே தவிர எவ்வித அரசியல் நோக்கங்களுக்கும் அல்ல என்பதை சர்வதேச அமைப்புக்கள் 

புரிந்துக் கொள்ள வேண்டும். தேசிய சுயாதீனத்தன்மைக்கு சர்வதேச சமூகங்கள் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.மரண தண்டணை விடயத்தில் சர்வதேசத்தில் மட்டுமல்ல உள்ளுர் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பினை தெரிவிப்பது பொருத்தமற்றதாகும். 

போதைப்பொருள் வியாபாரமே எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு நாட்டை அழிக்கும் சக்தி போதைப்பொருள் வியாபாரத்தில் உண்டு. விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 

 போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நேரடி தொடர்பு கொண்டு இருந்தமையின் ஊடாகவே ஆயுதங்களை பெற்றுக் கொண்டு 30 வருட கால சிவில் யுத்தத்தை முன்னெடுத்து சென்றார். போதைப்பொருளில் இருந்து விடுப்பட்ட நாடு என்ற தொனிப்பொருளினை 

முன்னிலைப்படுத்தி கடந்த மாதம் 23ம் திகதி தொடக்கம் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுத்த தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார செய்திட்டத்தின் இறுதி தின நிகழ்வு இன்று சுஹததாச உள்ளக விளையாட்டரங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு