கணவனுடன் சென்ற பெண்ணை மூா்க்கத்தனமாக தாக்கி நகைகளை கொள்ளையிட முயற்சி..! வவுனியா- கோமரசங்குளத்தில் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
கணவனுடன் சென்ற பெண்ணை மூா்க்கத்தனமாக தாக்கி நகைகளை கொள்ளையிட முயற்சி..! வவுனியா- கோமரசங்குளத்தில் பதற்றம்..

வவுனியா கோமரசங்குளம் பகுதியில் இன்றிரவு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளம் பெண் மீது இனந்தொியாத நபா்கள் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனா். 

இன்றிரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, கோமரசங்குளத்திலிருந்து மகாறம்பைக்குளம் நோக்கி குறித்த பெண் கணவர் மற்றும் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் கோமரசங்குளம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பின்பகுதியிலிருந்த பெண் மீது தடியினால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு 

அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியினை அறுக்க முற்பட்டுள்ளனர். இதன் போது கணவன் காப்பாற்றுமாறு கத்தியுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இனந்தெரியாத நபர்கள் தப்பித்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் கணவரின் உதவியுடன் காயமடைந்த பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.32 வயதுடைய லிடவின் யாழினி என்ற பெண்ணே 

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு