பொலிஸாருக்கு அதிா்ச்சியை கொடுத்த சஹரான் ஹாசீமின் பயிற்சி முகாம்..! தோண்ட தோண்ட ஆயுதங்கள்..

ஆசிரியர் - Editor I
பொலிஸாருக்கு அதிா்ச்சியை கொடுத்த சஹரான் ஹாசீமின் பயிற்சி முகாம்..! தோண்ட தோண்ட ஆயுதங்கள்..

மட்டக்களப்பு- ஒல்லிக்குளம் பகுதியில் முஸ்லிம் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் முற்றுகையிடப்பட்ட நிலையில், அங்கு மீட்கப்பட்ட பெருமளவு இராணுவ உபகரணங்கள் தொடா்பான தகவல்களை பொலிஸாா் வெளியிட்டிருக்கின்றனா். 

ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலை குண்டு தாக்குதலில் தொடர்புடைய சஹ்ரானின் இரண்டாம் கட்ட தளபதியான சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட முகமட் மில்கான் என்பவரிடம் 

குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் பெருமளவு வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதனை அடுத்து மட்டக்களப்பு, 

காத்தான்குடி காவற்துறைப் பிரிவிலுள்ள ஓல்லிக்குளம் பகுதியில் சஹ்ரானின் தங்குமிடான முகாம் ஒன்றை கடந்த மாதம் காவற்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் நேற்று கொழும்பில் இருந்து 

முகமட் மில்கானை அழைத்து செல்லப்பட்டு, இந்த முகாம் பகுதியில் நிலத்தை தோண்டும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.இதன் போது எஸ்லோன் பைப்பில் அடைத்து பாதுகாப்பாக நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 392 ஜெலக்னைட் குச்சிகள், 

எட்சோட் ரக வெடிமருந்து 8 கிலோ, சேருவின் 184 யார் கொண்ட 4 பக்கற்றுக்கள், ரி 56 ரக துப்பாக்கியின் 361 ரவைகள், எம் 16 ரக துப்பாக்கியின் ரவைகள் 80, திருப்பாச்சி வாள்கள் 11, சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்காக வெட்டப்படும் 

மதினா 19 புது வாள்கள், டெட்டனேற்றர்கள் 1500 என்பனவற்றை குற்றப் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு