தமிழீழ விடுதலை புலிகளும் போா் குற்றமிழைத்தனா்..! அதை நிரூபிப்பதற்கான ஆதாரமே இதுவாம்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளும் போா் குற்றமிழைத்தனா்..! அதை நிரூபிப்பதற்கான ஆதாரமே இதுவாம்..

தமிழீழ விடுதலை புலிகள் போா் குற்றமிழைத்தனா் என நிரூபிப்பதற்கான முதல் ஆதாரமாக 26 இராணுவத்தினா் கொல்லப்பட்டமை தொடா்பில் 3 முன்னாள் போராளிகள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை தாம் பாா்ப்பதாக சட்டமா அதிபா் திணைக்களம் வவுனியா மேல் நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளது. 

போர்க் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் 26 பேரை கொலை செய்ததன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்குற்றமிழைத்தனர் என்று என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளிகள் மூவருக்கு எதிரான வழக்கு 

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் மூவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை மன்றினால் வழங்கப்பட்டது. 

இதன்போதே வழக்குத் தொடருனரான சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான மூத்த அரச சட்டவாதி மாதவ தென்னக்கோன் மேற்கண்டவாறு மன்றுரைத்தார். 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது முல்லைத்தீவு விஸ்வமடுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த போர்க் கைதிகளான 

கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் 26 பேரை பெற்றோல் ஊற்றப்பட்டு எரியூட்டிக் கொலை செய்தனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான மதியரசன் சுலக்சன், கணேசன் தர்ஷன் மற்றும் சிவதுரை திருவருள் ஆகிய மூவரும் 2012ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து 

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். 2017ஆம் ஆண்டு சந்தேகநபர்கள் மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் இந்த வழக்கின் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து 

வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு சட்ட மா அதிபரால் மாற்றப்பட்டது.நீதிமன்ற நியாயத்திக்கத்தின் அடிப்படையில் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றிலேயே நடத்தப்படவேண்டும் என்று அவர்கள் சார்பில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் 

அடிப்படையில் சட்ட மா அதிபரால் வழக்கு மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது. 2012ஆம் ஆண்டு தொடக்கம் முன்னாள் போராளிகளான மதியரசன் சுலக்சன், கணேசன் தர்ஷன் மற்றும் சிவதுரை திருவருள் ஆகிய மூவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்

தொடர்ச்சியாக 7 வருடங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் மூவரும் பலத்த பாதுகாப்புடன் 

அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.சட்ட மா அதிபர் சார்பில் மூத்த அரச சட்டவாதி மாதவ தென்னக்கோன் மற்றும் அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் ஆகியோர் முன்னிலையாகினர்.

 சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டவாதி அன்ரன் புனிதநாயகம் முன்னிலையானார். சந்தேகநபர்களுக்கு திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை மன்றினால் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை நாளை (ஜூன் 25) வரை ஒத்திவைப்பதாக வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு