57 வயது பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I
57 வயது பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்..

திருகோணமலை- கந்தளாய் பகுதியில் தனிமையில் வாழ்ந்த 57 வயதான மூதாட்டியை துஸ்பிரயோகம் செய்த நகரை அடுத்த மாதம் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாற கந்தளாய் நீதிவான் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது உத்தரவிட்டுள்ளாா். 

அக்போபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் போதைப் பாவனைக்கு அடிமையானவர் என்றும் திருடுவதற்கு சென்ற போது 57 வயதுடைய பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி சென்றுள்ளதாக 

கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு