வடக்கின் பல பாகங்களில் இன்று சனிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்.பிரதேசத்தில்:
இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை யாழ்.சுன்னாகம் இலங்கை வங்கி பிரதேசம், மருதனார்மடம் ஒரு பகுதி, இணுவில் ஒருபகுதி, கோண்டாவில் புகையிரத நிலையப் பிரதேசம், உப்புமடம், தாவடி, சுதுமலை, மாப்பியன், பத்தனை, மானிப்பாய் வைத்தியசாலைப் பிரதேசம், மானிப்பாய் கார்கில்ஸ் பூட் சிற்றி, ஈஞ்சடி வைரவர் கோவிலடி, மேதர், மயிலிட்டி ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.