போதையில் திருகுவலையால் தாயை தாக்கி கொலை செய்த மகன்!

ஆசிரியர் - Admin
போதையில் திருகுவலையால் தாயை தாக்கி கொலை செய்த மகன்!

யாழ்ப்பாணம் கைதடி குமரநகர் பகுதியில், போதையில் வீட்டுக்கு வந்த மகன் தாக்கியதில் படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.     

கைதடி குமரநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் தினமும் போதைப் பொருட்களைப் பாவித்துவிட்டு வந்து தனது தாயுடன் சண்டையிட்டு அவர் மீது தாக்குதல் நடத்துவதை வழமையாகக் கொண்டிருந்துள்ளார். இவ்வாறே கடந்த திங்கட்கிழமை இரவும் போதையில் வீட்டுக்கு வந்தவர் தனது தாயைத் தேங்காய் திருகுவலையால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த தாயை அயலவர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றுகாலை தாய் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் 32 வயதான மகனைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு